எம்
    மொழிக்கும்

இல்லா
            சிறப்பு இங்கு
எம்
     மொழி தமிழுக்கு உண்டு

அது
    செம்மொழி என்று

செழித்தோங்க
           கண்டு உள்ளம்

களிப்புறுமே
              நன்று

அம்மா
     என்றழைக்கும்

மழலை
      உதிர்க்கும் ஆரம்ப

சொல்லில்
         முளைக்க தொடங்கி

வாழ்வில்
        இறுதி வரை நிலைக்கும்

அழகு
        மொழியல்லவா
அது
      அன்பே உருவான

தாயின்
        வழி மொழியல்லவா

அற்புத
     அன்னை தமிழ்மொழியை

தாய்க்கு
        நிகராய் நேசிப்போம்
தலை
   சாயும் வரை சுவாசிப்போம்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது