தனிமை
        தரும் தருணங்களில்

புதைத்த
        உணர்வுகளை மீண்டுமொரு

முறை
       புரட்டி   பார்க்கிறேன்

பழகிய
       நினைவுகளை

பகிர்ந்த
        உணர்வுகளை

மகிழ்ந்த
        பொழுதுகளை

மறு
     படியும் மனதில் தேக்கி

எனக்குள்ளே
             ரசிக்கிறேன்!!

பாலை
        வனமாய் இருந்த

இந்த
       பாவை மனதை

சோலைவனமாக்கிய
         சொந்த காரன் நீ என்பதையும்

நினைத்து
            பார்க்கிறேன். நீ இல்லாத

தனிமை
         வேளையில் இனிய மாலையில்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது