பிஞ்சு
       மலரின்

கொஞ்சும்
           அழகில்

நெஞ்சம்
       மகிழ்வோம்

மன
      சுமைகள் அகன்று

மகிழ்ச்சி
          அலைகள் 
அடிக்க
     

பணம் படைத்தவன் எல்லாம் பலம் படைத்தவன் அல்ல

 மனவளம் மனநலம் படைத்தவனே பலம் படைத்தவன்

 வலிமை படைத்தவனாவான்!



முகிழ்
      கிழித்து

முளைத்து
        வரும் இளங்காலை

சூரியனின்
          ஒளி முகத்தில்

இமை
      விலக்கி இரு

விழி
      திறப்போம்


சிறப்பாக்க
        பொறுப்பாக

 முயல்வோம்!!

வாழ்கை  வாழ்வதற்கே
யாருக்கும்   இங்கு  வெற்றி    நிரந்தரமில்லை .
அதை  போன்றே  தோல்வியும் நிரந்தரமில்லை.

 வெற்றியும்       தோல்வியும்       வாழ்க்கை
 எனும்      நாணயத்தின் இரண்டு        பக்கங்களே!!

 ஒன்று   இல்லை   என்றால்   மற்றொன்று
செல்லாது மதிப்பு இல்லாது!!!






செம்பருத்தி
         சிரிக்க

செவ்விதழை
          விரிக்க

செங்கதிரும்
          உதிக்க

பிறந்த
       #செவ்வாய்

எழும்
      பிரச்சனைகளை

களைகின்ற
        சிறந்த நாள் ஆகட்டும்


முன்னேறி செல்பவரை போட்டியாக கருதினால்
ஆற்றல் நம்மை முன்னேற்றி செல்லும்!!

பொறாமையாக கருதினால் ஆத்திரம்
நம்மை அழிவுக்கே பின்னோக்கி தள்ளும்!!




கவலை  என்னும்  குப்பையை  தேவையின்றி   சும்ந்து

மகிழ்ச்சி என்ற  மலரின்   வாசத்தை சுவாசிக்க

மறந்து   விடுகிறோம்   நம்மில்   பலர்

பிரச்சனை இல்ல  மனிதன்  என்று  பிரபஞ்சதில் யாரும்  இல்லை


கற்ற கல்வியையும் தான் பெற்ற அனுபவங்களையும்

எவனொருவன் சரியாக பயண்படுத்துகிறானோ

அவனே சாதனைக்குரிய மனிதனாக திகழ்கிறான் தன் வாழ்வில்!!


வானத்து
       நிலவொன்று

இங்கு
     மண்ணில் வந்ததோ!!

வாலிபத்தை
        அது தன்னகத்தே

கொண்டு
            வந்ததோ!!

சிற்றிடை
       மேனியாய்

சிங்கார
        ராணியாய்

அடர்
      வனத்தில்

அன்ன
       நடை பயிலும்

அழகு
       தேவதையே!!

திரும்பி
       பார் என்னை

உன்னை
      விரும்பும் விழிகளிரண்டு

உனக்காக
        காத்திருக்கிறது!!

நீ
     விரும்பும் வகையில்

புகழ்
      மொழியில்

கவி
      பாடுகிறேன்!!

என்
     மொழி கேட்டு

உன்
     செவி மகிழும்

என்
     இதயதமிங்கு குளிரும்!!




மழலையின்
      அழகு திரு முகத்தில்

கண்
      விழித்து

#திங்களின்
       விடியலை

புன்னகை
      கொண்டு வரவேற்போம்!!!



மழலையின்
      அழகு திரு முகத்தில்

கண்
      விழித்து

#திங்களின்
       விடியலை

புன்னகை
      கொண்டு வரவேற்போம்!!!






எதையும் அறியும் முன்பே

 முடிவெடுப்பது அஞ்ஞாணம்

உள்ளத்தால் உணர்வது மெஞ்ஞாணம்

அனைத்தையும் அறிவு கொண்டு

ஆய்வு செய்வதே விஞ்ஞாணம்!!


எம்
    மொழிக்கும்

இல்லா
            சிறப்பு இங்கு
எம்
     மொழி தமிழுக்கு உண்டு

அது
    செம்மொழி என்று

செழித்தோங்க
           கண்டு உள்ளம்

களிப்புறுமே
              நன்று

அம்மா
     என்றழைக்கும்

மழலை
      உதிர்க்கும் ஆரம்ப

சொல்லில்
         முளைக்க தொடங்கி

வாழ்வில்
        இறுதி வரை நிலைக்கும்

அழகு
        மொழியல்லவா
அது
      அன்பே உருவான

தாயின்
        வழி மொழியல்லவா

அற்புத
     அன்னை தமிழ்மொழியை

தாய்க்கு
        நிகராய் நேசிப்போம்
தலை
   சாயும் வரை சுவாசிப்போம்!!

பதினாறு
      வயதினிலே

பார்த்த
       பருவ மயில்

உருவம்
      தொலைத்து

உயிரையும்
       தொலைத்து விட்டது

இன்று
          எமனிடம்!!

குழந்தை
         முகமாய்

கொஞ்சி
         தவழ்ந்த வஞ்சி கொடியிவள்

இன்று
     மன்னை மறந்து

வின்னின்
      விலாசம் தேடி

சென்று
         விட்டாள்

நம்
    விழிகளில்

கண்ணீர்
      துளிகளை

கடலளவு
       தேக்கி விட்டு!!!


செந்தூர
      நிலவொன்று சிறப்பாக

புருவ
       மத்தியில்

பொன்
        நிலவாய் அமர்ந்திருக்க

உன்
     ஏகாந்த எழில் அழகில்

வியந்த
      என் விழிகள்

விளக்கிட
        மொழி தேடி தவிக்கிறதே!!



ஆயிரம்
      கவலைகள்

அனி
      வகுத்தாலும்

மழலை
       குழந்தையின்

மகிழ்ச்சி
        புன்னகையில்

அவை
       மறந்தே போகும்

மனதில்
     இன்பம் நிறைந்தே சேரும்!~

#திங்கள்
        விடியலில் திருப்பமும்

தங்களின்
        வாழ்வில் விருப்பங்களும்

நிகழ
      திகழ மகிழ

நட்பு
     நல் இதயங்களுக்கு

இனிய
      காலை வணக்கம்


தாமரை மலரிலே   பிறந்திட்ட  முருகா

என்    தலை எழுத்தை   மற்றிட வா   இறைவா

திருப்பரம்  குன்றம்   பழனிமலை திருச்சந்தூரு மருதமலை

திருத்தணி பழமுதிர்  சோலையிலும்  முருகா  முருகா

ஓம்   முருகா   முருகா முருகா ஓம்  முருகா...
நம்மை விமர்சிப்பவர்களை

 நாம் வெறுக்க தேவையில்லை

 நம்மையும் பொருட்படுத்தும் அளவிற்கு

 அவர்கள் மனதில் நாம் இடம் பிடித்திருக்கிறோம்

என்று மகிழ்ச்சி அடைவோம்



நேற்றைய அனுபவங்களையும்
 இன்றைய நிகழ்வுகளையும்
நாளை பெற போகும் வாய்ப்புகளுக்காக
சரியாக பயன்படுத்தி கொள்பவன்
எவனோ அவனே சாதனைக்குரிய
மனிதனாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடியும்!!


 சூல்
       கொண்ட மலர்

சூரிய
       ஒளிகதிர் பட்டு

இதழ்
         விரிக்க

சுற்றிய
       பனித்துளி

சட்டென்று
               விலக

பிறக்கும்
       #திங்கள்


தனிமை
        தரும் தருணங்களில்

புதைத்த
        உணர்வுகளை மீண்டுமொரு

முறை
       புரட்டி   பார்க்கிறேன்

பழகிய
       நினைவுகளை

பகிர்ந்த
        உணர்வுகளை

மகிழ்ந்த
        பொழுதுகளை

மறு
     படியும் மனதில் தேக்கி

எனக்குள்ளே
             ரசிக்கிறேன்!!

பாலை
        வனமாய் இருந்த

இந்த
       பாவை மனதை

சோலைவனமாக்கிய
         சொந்த காரன் நீ என்பதையும்

நினைத்து
            பார்க்கிறேன். நீ இல்லாத

தனிமை
         வேளையில் இனிய மாலையில்!!

பூக்களின்
       மெண்மையாய்

புன்னகையில்
      உண்மையாய்

தென்றலின்
        இனிமையாய்

தியாகத்தின்
         வரமாய்

பிரபஞ்ச
        பேரண்டத்தில்

வாழுகின்ற
       பேரழகியாய்



சிசுவை
      கருவில் சுமந்தவள்

தெருவில்
        இறக்கிறாள்

பெண்களை
        தெய்வமாய் போற்றும்

எம்
    தமிழ் தேசத்தில்!!

காலனாக
      வந்த காவல் ஆய்வாளரின்

கடுமையான
          போக்கினால்!!

என்ன
         தேசமிது!!

திட்டங்களும்
      சட்டங்களும்

மக்களை
        காக்கவா

மமதை
       பிடித்த சில அதிகார

போதை
         கொண்ட மிருகங்களின்

கொடூரத்திற்கு
        மக்களை இரையாக்கவா!!

பெண்கள்
         தினத்தில் பெண் இறப்பு

நாகரிக
  நம்     சமூகம் எதை நோக்கி செல்கிறது!

என்ற
      கேள்விக்கு என்ன விடை

யார்
     சொல்வது!!

இறந்த
       பெண்மணிக்கு
கண்ணீர்
       அஞ்சலி!!!!


அழகு
      தென்றல்

அமைதியாக
                 வீச

 பூந்தென்றல்
                   நீயும்

புன்னகையால்
                   பேச
உன்
      மவுன மொழியில்

மயக்கும்
            விழியில்

மாசற்ற
        இதயங்களில்

மகிழ்ச்சி
        ஒளி பிறக்கிறது!!

அந்த
      நிலவுக்கு போட்டியாக நீ  அழகே

பெற்ற தாயும் வளர்க்கும் தந்தையும் கற்று தரும் குருவும்

மட்டுமே நம்மால் துதிக்கபட வேண்டியவர்கள்

மற்றவர்கள் எல்லாம் மதிக்கபட வேண்டியவர்களே

 தவிர துதிக்க தேவையில்லை!!




மேக
       தழுவலில்

மோகம்
        கொண்டு

தேகம்
        குளிர் கான

தாகம்
      கொண்டு

தன்னை
         மறைக்கும்

மாலை
       சூரியனே

உன்
      அழகை கண்டு

விழிகள்
        மயங்கி

மொழி
      பாடுகிறது!

நாம் மற்றவர்களால் மகிழ்ச்சி அடைவதை விட
நம்மால் மற்றவர்களை மகிழ்ச்சி அடைய வைப்பதே
 நமது பெருமை


வண்ண
      மலர் பூத்திருக்கு

வணக்கம்
      சொல்ல காத்திருக்கு

நட்பு
     நல் இதயங்களுக்கு

#ஞாயிறு
        விடியல் நல் வணக்கம்




மாயம்
      என்ன செய்தாய்
என்
        மன்னவா
மனதில்
         ஆசைகளை சுமந்தே
அலை
         பேசியில்
விரல்கள்
          பதித்து விலாசம் தேடுகிறது
நீ
     இருக்கும் இடம்

என்
      இதயம் என்பதை மறந்து

என்
      செவியும் சிந்தையும்

எல்லாம்
          மறந்து உன்னையே சுமக்கிறது!!

பசுமை
      கொடி பிடித்து

பைங்கிளி
        விழி விரித்து

பார்க்கும்
      திசையில்

பரவச
      இசை ஒலிக்கிறதே

அந்த
      வான் நிலவும்

வஞ்சி
      கொடியின்

மிஞ்சும்
       அழகில்

தஞ்சம்
       புக தருணங்கள் தேடும்!


மற்றவர்களின் குறைகளை கண்டு குற்றம் சாட்டாமல்

அவர்களது நிறைகளை கண்டு பாராட்டிட பழக முனையுங்கள்

மகிழ்ச்சி மனதில் இருவருக்கும் நிலைத்து நிற்கும்




மழலை
      சிரிப்பில்

மகிழ்ச்சியின்
        திளைப்பில்

பிறந்திடும்
           #ஞாயிறு

தங்கள்
       வாழ்வில்

சிறந்திடும்
      தினமாக அமையட்டும்

நட்பு
    நல் இதயங்களே


தாவனி
       சிட்டுக்கள்

தளிர்
      கொடி மொட்டுக்கள்

துள்ளி
       திரிந்து விளையாடிய

அந்த
      கால அழகிய இளமை பருவங்கள்

அக
      கண்களில் இப்பொழுதும்

அலையடித்து
         செல்கிறது மகிழ்ச்சியாய்!!

குதுகலமாய்
         குறும்பு தனமாய்

குமரி
       பருவத்தில் கொண்டாடிய

பாண்டி
        விளையாட்டை பட்டென்று

மறக்க
       முடிய வில்லை

மறுக்க
       முடிய வில்லை மகிழ்ச்சியான

அந்த
      இனிய தருணங்களை

இன்றளவும்
         எம் இதயத்தால் !!!ஆம்

விழிகளோ
         நிலத்தை பார்க்க

முழங்கால்
         மடக்கி முத்தாய்ப்பாக

தாண்டும்
        எம் குலப்பெண்களின்

ஏகாந்த
       விளையாட்டுகள் எங்கே போனது!!

நாகரிக
       மோகத்தில் எம் தமிழ் தேசமும்

இழந்து
       விட்டதே கூடி விளையாடிய

குமரி
      பெண்களின் குதுகல

 விளையாட்டுக்களை்!!

இனிய
      இரவு வணக்கத்துடன்!!
திறமை இருக்கும் இடத்தில் பொறுமை இருக்கும்

வறுமை இருக்கும் இடத்தில் வாழ்க்கையை

 எதிர் கொள்ளும் வலிமை இருக்கும்!!





பூத்திருக்கும்
         பிஞ்சு மலர் இங்கு

எழில்
        கொஞ்சும்

புன்னகை
         முகம் கொண்டு

புகழ்
      விடியலாக

புதன்
      விடியல்

தொடங்கிட
         வாழ்த்துகிறேன்..


மாலை
       தென்றல்

மகிழ்வுடன்
                வீச
தலை
        முடி தவழ்ந்து

புருவம்
       தழுவி

 பூவிழியில்
               பட்டு

எழில்
        முகத்தில்

ஏகாந்தம்
         பேச

கானும்
      காட்சிகள்

காண்பவர்
          இதயத்தில்

    கவித்துவ
              ஆட்சி புரிகிறது!

இனிய
      மாலை வணக்கத்துடன்!!

நிலையானதும் விலைமிகுந்ததும் 
என்று எதுவும் கிடையாது இவ்வுலகில் 

தேவையின் பொருட்டே தீர்மாணிக்கபடுகிறது 
பொருட்களின் மதிப்பும் 

உறவுகளின் பாசமும் என்பது தான் 
நிதர்சனமான உண்மை..





#திங்கள்
       மலர் பூத்திருக்கு

திரும்பும்
     திசையெங்கும்

இன்பம்
        காத்திருக்கு

அரும்பும்
       புன்னகையோடு

விரும்பும்
        வகையில்

கொண்டாடி
         மகிழுங்கள்


அழுது கொண்டே பிறப்பதும்
மற்றவர்களை அழ வைத்து இறப்பதற்கும்

இடையில் இருக்கும் காலத்தில்
சிரித்து கொண்டு வாழ்வதற்கும்

மற்றவர்களை சிரிக்க வைத்து
வாழ்வதற்கும் கற்று கொள்வோம்!!!




அகம்
      மலர

முகம்
      மலர

அதரங்கள்
       தான் மலர

பூவையிவள்
        செவ்விதழ் விரிப்பில்

#செவ்வாய்
       பிறக்கட்டும்

சிந்தை
       குளிரட்டும்!!

நமது பாசத்தை பரிசோதிப்பவர்களுடன் பழகுவதை விட 
நம்முடன் பாசத்தை பகிர்பவர்களிடம் பழகுவதுவே பயண் தரும் 
பெருமை தரும்!!

    


    


அழகு
      ஆபரனங்களின்

பொன்
       நகை கவர்ச்சியாக

ஜொலிக்கலாம்

அன்பு
       புன்னகை மட்டுமே

மனித
      மனங்களில்

வளர்ச்சியை
        அளிக்கும்!!

#சனியின்
          விடியல்

சந்தோசத்தை
        அளிக்கட்டும்
நட்பு
     நல் உறவுகாடும்


காற்றலையை
        தூதுவனாக்கி

வான்
      வெளியை வாகனமாக்கி

கையடக்க
        அலை பேசியிலே

என்
     காதலை சொல்கிறேன்

அது
     உன் காதிலே வந்து

உறுதியாய்
         சொல்லும்
என்
     உணர்வுகளின் மொழியை

உள்ளத்தின்
        வலிமையை

என்ற
      நம்பிக்கையில்!!


எல்லோரிடத்திலும் நான் நானாகவே இருக்கிறேன்...

உன்னிடத்தில் மட்டுமே நான் நாணலாக இருக்கிறேன்...


நமக்கு எந்த ஒரு
சூழ்நிலை வந்தாலும்
மற்றவர் மனது
புண் படும்படி
பேச கூடாது
என்று புரிந்து
கொள்ளவேண்டும்
சிறிய வார்த்தைகள்
கூட பெரிய இழப்பை
ஏற்படுத்தலாம்....
என்னை  எடை  போடுவதற்கு..
       
நீங்கள்  தராசும் அல்ல,
         
 நான்    விலைபொருளும்   அல்ல.
பிரபஞ்சமே
            வியக்கும்

பேரதிசயம்
      மிக்க  தாஜ் மகால் கூட

தள்ளி
            நிற்கிறது!!

உன்
      பேரழகை கண்ட

என்
      விழிகளுக்கு முன்னால்!!

கட்டிட
      அதிசயமும்

கரைந்தே
        போகிறது

உந்தன்
       கட்டழகை வர்ணிக்கும்

எந்தன்
      கற்பனைக்கு முன்னால்!!


எதிரிகளுக்கு மத்தியில் கத்தியோடு வாழ்வதை விட..

நண்பர்களுக்கு மத்தியில் புன்னகையோடு வாழ்வதே
 பெரும்பாடு..



*பிடித்தவர்களிடமிருந்து பிடித்தமான வார்த்தைகள்
 மட்டுமே வரும் என்று எதிர்பார்த்தால்
முட்டாள்களின் வரிசையில் முதலிடம் நமக்கே....!!!*



நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது