ஈட்டியாக
       துளைத்திடும்

உந்தன்
      இருவிழி பார்வையில்

மெய்
       மறந்த என் இதயம்

பொய்
       உதிர்க்க தயங்குவது ஏன்!!

கருமை
        மையிட்டு அழகாக்கும்

காரிகையே
       உன் விழிகளில் விளையாடும்

தூரிகை
         செய்த பாக்கியம் என்ன

உன்
     விரல் பிடித்து வித்தை புரிகிறதே

தத்தை
        கிளி உந்தன் பேரழகோடு!!

எந்தன்
       சிந்தை முழுவதையும் சிறை படுத்தி

சித்திரம்
        வரையட்டுமா
உந்தன்
      அழகை பற்றி ஆயிரமாயிரம்

பக்கங்கள்
       படைத்து சரித்திரம் எழுதட்டுமா!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது