வான்
     மேகத்தின் நிலவாய்

என்
    மோகத்தின் கனவாய்

ஆர்ப்பரிக்கும்
       ஆசைகளின் உணர்வாய்

அமர்ந்திருக்கும்
        அழகு தேவதையே

உன்னை
       பற்றி கவிதை சொன்னால்

கதைக்காதே
        கள்ளா என்கிறாய்

கதையாக
       சொன்னால் கவிதை என்கிறாய்

எதை
      சொன்னாலும் ஏற்க மறுக்கிறாய்

உன்
     இதயத்தை கொள்ளையிட

எது
     தான் வழியென்று

இப்போது
       நீயே சொல்  நான் கேட்கிறேன்!!

எத்துனை
       அழகு இந்த நிலவின் முகத்தில்

களவு
       கொள்ளவா காதல் கொள்ளவா!!

என்
      கற்பனைக்கு

இருக்கும்
         சக்தியை போல்
என்
      கைகளுக்கு மட்டும் இருந்தால்

அந்த
      நிலவை கொண்டு வந்து

நிறுத்தி
       விடுவேன் இவளருகில்!

அழகு
      போட்டியில் பங்கு கொண்டு

அதனை
       தோற்று விட செய்வேன்!!


என் கற்பனை அழகாணது தான் நான் அழகல்ல என்பது எனக்கு தெரியும் அதனால் அழகாணதை பற்றியே என் கற்பனை யோசிக்கிறது நேசிக்கிறது!!


நீ
   விழி திறந்து

பார்க்கும்
     அழகில் வியந்து

மகிழ்ந்து
     மொழி பிறந்து

முத்தான
        கவி ஒன்றை

முகிழ்
     நிலவே உனக்காக

நான்
     படைக்கவா!!

உன்

விழியின்
     அழகில் வியந்து

மொழியின்
      கனவில் மிதந்து

கவியின்
       துளியை

உன்
     மீது மழையென

பொழிகிறேன்!!

மகிழ்ந்து
     நீ எழுந்து வா!!

க‌ண்ம‌ணியே, உனை ச‌ந்திக்க‌
ஒரு வாய்ப்பு கொடுத்துவிடடி.

பிஞ்சு விர‌லால் எனை மெல்ல‌ தொடு,

உனை நேசிக்க‌ ஆணையிடு,
உன் அழகை ஆள‌விடு...

உன் இத‌ழ் மீது இருக்க‌விடு...

உன்னில் தொலைத்த‌ என்னை தேட‌விடு...

உன் ம‌டிமீது எனை மாய்த்துவிடு

அதுவ‌ரை,
ம‌ர‌ண‌மே என்னை ம‌ன்னித்துவிடு.


பாவை
     உந்தன் பார்வையால்

பைத்தியமாக
       ஆக போகின்றன

பல
     ஆண்களின்

அழகான
      அமைதியான இதயங்கள்

அநாவசியமாக!!

Kavithaikal aaeiram blogger. Come
அலை
     பாயும் கூந்தலை

நீயும்
    அள்ளி முடிகிறாய்

நிலை
     குலையும்

என்
    மனதை

நீயும்
    தான்  கிள்ளி எறிகிறாய்

உனக்காக
      உன்னில் பேரழகை

படைத்த
         அந்த பிரம்மன்

உந்தன்
      இடையின் அளவை

ஏன்
     தான் பெருமளவு குறைத்தானோ

விளங்க
        வில்லை

வியக்க
      வைக்கும் விழிகளுக்கும்

மயங்க
       வைக்கும் மொழிகளுக்கும்

மந்திர
      சொல்லாக மாறி போனது

உன்னிடம்
      நான் கானும் உந்தன் பேரழகு!!


மனதிற்கு
      இனியவளே

மகிழ்ச்சிக்கு
      உரியவளே

உன்னை
       படைத்த பிரம்மன்

கற்பனையை
         தேக்கி வைத்து

இறுதியில்
          படைத்து விட்டானோ

இதயத்தின்
         உணர்வுகளை

ஒன்று
       குவித்து இவ்வளவு அழகாக!!

கானும்
      கண்கள் வியக்கும் வண்ணம்

கவிதை
      மொழிகளுக்கு நண்மை

பயக்கும்
      வண்ணத்தில்!!
Kavithaikal aaeiram www.blogger. Come
பொழுது
        போக்க சிலர்

பொழுதை
       போக்கவே சிலர்

ஆறுதலை
        தேட சிலர்

அறிந்ததை
       பறைசாற்ற சிலர்

அரசியலை
          போற்றிட சிலர்

அதையே
        தூற்றிட சிலர்

கலகத்தை
         விளைவிக்க சிலர்

கழகத்தை
        பரப்பிட சிலர்

ஆண்மீகத்தை
          பரப்பிட சிலர்

எண்ணற்ற
        கலவைகளில்

உலா
      வரும் இணைய தளத்தில்

இதயம்
       இல்லாத தளமாக களமாக

முக
        நூல் முகமூடி நூலாக

சில
     நேரங்களில்

சிலரின்
      செயல்களில்

செயல்
      படுகிறது இயந்திரம் போல்!!

துளி துளியாய் விழும் மழை துளியை நானும் ரசிக்கின்றேன் என்னவள் என் இதழில் பதித்த முத்தத்தின் ஈரத்தோடு இனைத்து இதமாய் ருசிக்கின்றேன்!

வேண்டாம் என்றால் விட்டு விடவா போகிறாய் தொட்டு விட்டு செல்லும் தூறல் மழையே இலவசமாய் இருமலையும் அல்லவா அளித்து விட்டு போகிறாய் !!
வெளுத்து வாங்குதடா வேடிக்கை காட்டுதடா விடிய விடிய சாரல் மழை விழிகளுக்குள் தான் மகிழ்ச்சி நிலை!!

அடை மழையில் ஆடை நனைய அழகாக ஆட பிடிக்கும்  ஆனால் பிடிக்காத ஜலதோசம் பீடிக்குமே என்ற அச்சமே என்னை மிச்சம் வைத்ததே!!






ஆங்கிலேய
        ஆதிக்க வாதிகளிடம்

அடிமையாய்
         கிடந்த இந்திய பெருங்கண்டத்தை

தன்னலமற்று
      பொது நலம் கொண்டு

ஆற்றல்
         பலபுரிந்து

இந்திய
        தேசத்திற்காக

சிந்திய
      ரத்தங்கள் ஏராளம் ஏராளம்!!

செக்கிழுத்து
        செங்குருதி வடித்து செய்த

தியாகங்கள்
       ஏராளம் ஏராளம்!!

விடுதலைக்காக
             உயிர் துறந்து

வீரமரணம்
       எய்திட்ட தீரமிகு தலைவர்கள்

நமக்காக
      நாம் சுதந்திரமாக வாழ

பெற்று
       தந்த பெருமை மிகு

சுதந்திரத்தை
        பேணிகாப்போம்!!

உயிர்
       மூச்சாக கருதி!!!



தானாக வரும் என்று தவமிருக்காதே வீனாகி போணதென்று விரக்தி கொள்ளாதே எல்லாம் வரும் எல்லாம் போகும் என்பது தான் இயல்பு என்பதை மறந்து விடாதே!!
தானாக வரும் என்று தவமிருக்காதே வீனாகி போணதென்று விரக்தி கொள்ளாதே எல்லாம் வரும் எல்லாம் போகும் என்பது தான் இயல்பு என்பதை மறந்து விடாதே!! மலரை போல் சிரித்திடு மனதை மகிழ்ச்சியாய் எப்போதும் வைத்திடு எந் நாளும் பொன் நாளே இதயம் விரும்பும் நன்்நாளே!!

விமர்சித்தவர்கள் கூட விரும்பிய தலைவர் இந்தியாவை இதயபூர்வமாக ஏன் தன் இதயமாகவே நேசித்த தலைவர் மாற்று கருத்து கொண்டோரும் மதித்திட்ட தலைவர் ஆம் பாரதம் பெற்ற பண்புமிக்க தலைவர்களில் இவரும் ஒருவர் வயோதிகம் காரணமாக நம்மை விட்டு மறைந்து விட்டார் ஆனால் அவரது புகழ் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்!!! அண்ணாரின் ஆன்மா அமைதி பெற காலதேவனை வேண்டுவோம்!!
பொன் நகை பூட்டாத பெண் நிலவாய் ஒப்பனைக்கு இடம் கொடுக்காத நீ தான் என் கற்பனைகளுக்கு தளம் அமைக்கிறாய் என் கவிதைகளுக்கு வளம் அளிக்கிறாய் இயல்பான அழகில் இயற்கையான நிலவாய் ் இதயத்தை ஈர்த்து! இரவு வணக்கத்துடன்!!

இவள் வெளிச்சத்தை வெறுக்கவில்லை.. இருட்டுக்கு பழகிவிட்டாள்..அவ்வளவே!

அவள்

விழியோடும்
      இதழோடும்

வியப்பூட்டும்
      அழகோடு பேசும்

மனம்
      வீசும் மகிழ்வூட்டும்

மலரே

அவளிடம்
       பேசியது என்னவென்று
பொய்
       கூறாமல் என்னிடம்

சொல்லி
        விடு என் காதலை நீயும்

அவள்
       காதிலே கொஞ்சம்

ரகசியமாக
        சொல்லி விடு!!

நம்மாலும் இவ்வளவு நேசிக்க முடியும் என்றும் நம்மாலும் இவ்வளவு கோபப்பட முடியும் என்றும் நமக்கே உணர்த்த ஒரு லூசு எல்லாருக்கும் வாய்ச்சிருக்கும்....
சாலையில்
               ஓடிடும்

சாரல்
       மழை வெள்ளத்தில்

சேர்ந்தே
       நாம் பயணிப்போம் வா

இருவரும்
        இனைந்தே வெள்ளமதில்

காகித
       கப்பலை விடுவோம்

சிறு
     பிள்ளைகளாய் மாறி

காதல்
      ஓடமென்று கற்பனையாய்

அதற்கு
          பெயரிடுவோம்

நிழல்
       காதல் நிஜமாகும் வரையில்!!


பிண்ணிரவு பிறைநிலவு கூட விடைபெற்றாயிற்று உன் நினைவு மட்டும் என் இமைகளை மூட விடாமல் தடை போடுகிறது ஏன்!!

கற்பனைகளை களவாடும் நிலவாய் கனவுகளில் விளையாடுகிறாய்.....



இழப்பதற்கு எதுவும் இல்லை நிரந்தரமாக இருப்பதுவும் எதுவுமில்லை!!


ஈட்டியாக
       துளைத்திடும்

உந்தன்
      இருவிழி பார்வையில்

மெய்
       மறந்த என் இதயம்

பொய்
       உதிர்க்க தயங்குவது ஏன்!!

கருமை
        மையிட்டு அழகாக்கும்

காரிகையே
       உன் விழிகளில் விளையாடும்

தூரிகை
         செய்த பாக்கியம் என்ன

உன்
     விரல் பிடித்து வித்தை புரிகிறதே

தத்தை
        கிளி உந்தன் பேரழகோடு!!

எந்தன்
       சிந்தை முழுவதையும் சிறை படுத்தி

சித்திரம்
        வரையட்டுமா
உந்தன்
      அழகை பற்றி ஆயிரமாயிரம்

பக்கங்கள்
       படைத்து சரித்திரம் எழுதட்டுமா!!


தூக்கம்
       மறந்து

ஏக்க
     விழியோடு

என்னை
      பார்க்கும் ஏந்திழையாள் நீ

உன்
     விழி கண்டு மொழி பாடுகிறேன்

துயில்
      கொள்ள மயிலே நீ துனையாக

வரவேண்டும்
       என்ற வரம் வேண்டுகிறேன்!!



உன்
  புன்னகை

       #அரும்பு

உன்
     பூவிதழ் #குறும்பு

நீயோ
     இனிக்கும் #கரும்பு

என்
     இதயமோ

உன்னை
      விரும்பியே சுற்றும் #எறும்பு

       
அளவுக்கு அதிகமான அன்பு
முதலில் வியக்க வைத்து
பின்பு ரசிக்க வைத்து
கடைசியில்
அவமானப்படுத்தும்...!💔

இருவரின் விருப்பத்தில் பிறந்தாலும் இயற்கை விரும்பும் போது தான் மரணம் கூட மனிதனை அழைக்கிறது தனக்குள் ஆட்கொள்கிறது!!


மாலையில்
      மறைந்த சூரியன்

காலையில்
       எழுந்து வருகிறான்

மொழி
           காத்திட்ட
தமிழ்
       வழி காத்திட

உழைத்த
       சூரியனே நீ உறங்க

 சென்று
        விட்டது நியாயம் தானா!!



நிழல்

தேடும் உடல் !!

காற்றை
தேடும் இலைகள் !!

பறவை
தேடும் கிளைகள் !!

ஜெனனம்
தேடும் மரணம் !!

மழைக்காலம்
தேடும் அருவிகள் !!

குளிர்காலம்
தேடும் தேநீர் குவளைகள் !!

கைபேசி
தேடும் குறுஞ்செய்திகள் !!

என் கண்கள்
தேடும் அவள் !!

நட்பை
தேடும் கைபேசிகள் !!



நமக்காக எதும் இல்லாத போது 

பிறருக்காக வாழ முயற்சிக்கிறது 

                          மனது

           


   எதையும் விரும்பி   ஏற்காதே 

உன்னை விரும்புவதை ஒரு போதும்                                தவிற்காதே!




முகமறியா
         முகநூல் நட்புகளுடன்

அவர்களின்
        அகமறிந்தே பழகுகிறேன்

அன்பு
     என்ற ஒற்றை மொழியில்

அலை
       பேசி வழியில்!!

தொடரட்டும்
          நம் நட்பெனும் நல் வழி

 பயணங்கள்!!

இவ்வுலகில்
         இருக்கும் வரையில்

அன்பு
       எனும் அழகு மலரின் வாசத்தை

உயிரின்
        சுவாசமாய் உணர்ந்தேன்.!




😭 என்  

         கண்ணீரை

ஓவியமாக 

            படைத்தேன் 💖 

💟 என் 

       கவலை எல்லாம் 

கண்ணாடியில் 

             பார்த்து ரசித்தேன் 😍

கோமாளியாக  

          என் சோகத்தை 

      

 இந்த  புகைபடைத்தில் 

                            மறைத்தேன் 👆


உணர்வுகளோடு

                கலந்த உறவு


உரிமையோடு

            பழகும் உறவு


எதிர்பார்ப்புகள்

        இல்லாத உறவு


ஏமாற்றம்

         கொடுக்காத உறவு


தன்

     நலம் கருதாத உறவு


நம்

     நலம் விரும்பும் உறவு


ஆம்

      அது தான் #நட்புறவு


அது

      வெறும் உறவல்ல!!


நம்மை

       இயக்குகின்ற உயிர்!!!


நட்புறவுகள்

     அனைவருக்கும்


 #நண்பர்கள் 

          தின நல் வாழ்த்துக்களுடன்


மங்கல
      மஞ்சளும்

சிவந்த
      குங்குமமாய்

சிரிக்கின்ற
      என் தேவதையே

உன்னை
      காண ஓடி வந்தேன்

ஆடியிலே
      அன்பை சொல்ல

ஆசையோடு
      அணைத்து கொள்ள!

ஆடி
      பெருக்கென்று

அகிலமே
                சொல்ல

இனிக்கத்தான்
                 செய்கிறது

இதயம்
      நிறைந்தவளின் அழகை

ஆடி
      உதயத்தில்

ஆற்றங்கரையில்
        அருகில் நின்று ரசிக்கும்

அற்புத
       தருணங்களை

மனதிலே
       நினைத்திடும் போது!


கடிவாளத்தை

     அகற்றி கற்பனை குதிரையை

கட்டவிழ்த்து
             விடுகிறேன்
அது
     மொட்டவிழ்த்த மலர்களை

முகர்ந்து
       பார்த்து வருகிறது என்னிடம்!

மதி
     நுட்பம் கொண்டு நுகர்ந்து

கவி
    மொழியாக தமிழ் மொழியில்

சமைத்தேன்
               #நேற்றும்

சமைக்கிறேன்
                #இன்றும்

சமைப்பேன்
        #நாளையும் நானே!!

கண்டு
      ரசிப்போரும்

உண்டு
      ருசிப்போரும்

களத்திற்கு
        வாருங்கள்

கருத்துக்களை
           பகிர்ந்து கொண்டாடிட

எழுத்துலகில்
        பயணிப்போம் இனைந்தே

அழகு
     தமிழில் அனிவகுத்தே

அற்புதங்கள்
             பல படைத்தே!!




தலைமுறையை..
கண்ட..
மகிழ்ச்சி...

வாழ்க்கையில்..
இல்லை..
இனி..
இகழ்ச்சி...

பாசத்திற்கே..
உரித்தான..
நெகிழ்ச்சி..

பண்பாய்..
உயரட்டும்..
புகழ்ச்சி..😘
தலைமுறையை  கண்ட மகிழ்ச்சியில்

நேசங்களால்..

வெல்லும்..
உலகு..

நேர்மைக்கு..
இது தான்..
அலகு..

நேசித்தால்..
எல்லாம்..
இலகு..😘


கழுத்து  நிறைய   நகைகளோடு -

நடு - இராத்திரியில்   தன்னந்  தனியாக

நகர் வலம்  போகும் -   சுதந்திரம்
எல்லாம்  வேண்டாம்

எங்கள் -  பிஞ்சுக்  குழந்தைகள்

பட்டப்  பகலில்   பள்ளிக்  கூடம்
போகும்   அளவுக்காவது -  பாதுகாப்பு

இருந்தால்  போதும் .................  !


நீள்  

     முடி அழகா


வேல்
      விழி அழகா

அமர்ந்திருக்கும்
                      அழகே 

அசத்துகின்ற 
                நிலவே
உன்
      அழகை கண்டால்

அந்த
       நிலவே வானில்

உலவ
       வர மறுக்கும்

இத்துனை
        பேரழகா இவளென்று

தனக்குள்ளே
        வியக்கும்!!


நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது