மனிதர்களா நீங்கள்...!
ஊனைத் தின்று ஊனை வளர்த்து, சிதைக்குள் அடங்கும் சதைக்கு ஆசைபட்டு மிருகங்களான மானிடரே...!
காட்டில் வாழும் மிருகங்கள் கூட நாட்டில் வாழும் உங்களை கண்டு சிரிக்குதடா...!
காட்டில் வாழ்ந்தாலும் கண்ணியம் காத்து வாழுதடா , நாட்டில் வாழ்ந்து நாணயம் இழந்து போகின்றீர்களே நியாயம் தானா இழிவானோரே ...!
நாடி நரம்புகள் ஆடி அடங்கிப்போன பின்னும் இச்சை தீர்க்க பூந்தளிர்களின் உடல் கேட்குதாடா,
மிருகத்தை விட கீழானோர்களே...!
சட்டங்கள் எல்லாம் சத்தமின்றி உறங்குவதால் நித்தமும் உம் காமவேட்டை தொடருதடா..!
கடுமையான அரேபிய சட்டங்கள் இங்கிருந்தால் அருகில் உள்ள உன் மனைவியைக் கூட தொட நீ யோசிப்பாயடா ...!
காமக் கொடூரர்களே நீங்கள் எல்லாம் மனித குலத்திற்கே இழிவடா, மரணமே உங்களுக்கு சரியான தீர்வடா...!
No comments:
Post a Comment