எதிர்

      பார்த்து காத்திருக்கிறேன்


என்னவன்

        அவன் மண்ணவனின்


மதி

     முகத்தை காண வழியில்


விழி

      பதித்து கவியின் மொழி படைத்து!!!


பூத்திருக்கும்

         பூவாக வாசமுடன்


அவன்

       மீதான அளவில்லா நேசமுடன்!!


இல்லம்

         வந்து இந்த உள்ளத்தின்


உணர்வுகளை

       உன்னோடு பகிர்ந்து கொள்ள


உனக்காக

       காத்திருக்கிறேன்!!


துயில்

      கொள்ள துடிக்கும்


இமைகளுக்கு

        இரு சற்றே பொறு


      என

          தடை விதித்தே!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது