எதிர்
பார்த்து காத்திருக்கிறேன்
என்னவன்
அவன் மண்ணவனின்
மதி
முகத்தை காண வழியில்
விழி
பதித்து கவியின் மொழி படைத்து!!!
பூத்திருக்கும்
பூவாக வாசமுடன்
அவன்
மீதான அளவில்லா நேசமுடன்!!
இல்லம்
வந்து இந்த உள்ளத்தின்
உணர்வுகளை
உன்னோடு பகிர்ந்து கொள்ள
உனக்காக
காத்திருக்கிறேன்!!
துயில்
கொள்ள துடிக்கும்
இமைகளுக்கு
இரு சற்றே பொறு
என
தடை விதித்தே!!
மனிதர்களா நீங்கள்...!
ஊனைத் தின்று ஊனை வளர்த்து, சிதைக்குள் அடங்கும் சதைக்கு ஆசைபட்டு மிருகங்களான மானிடரே...!
காட்டில் வாழும் மிருகங்கள் கூட நாட்டில் வாழும் உங்களை கண்டு சிரிக்குதடா...!
காட்டில் வாழ்ந்தாலும் கண்ணியம் காத்து வாழுதடா , நாட்டில் வாழ்ந்து நாணயம் இழந்து போகின்றீர்களே நியாயம் தானா இழிவானோரே ...!
நாடி நரம்புகள் ஆடி அடங்கிப்போன பின்னும் இச்சை தீர்க்க பூந்தளிர்களின் உடல் கேட்குதாடா,
மிருகத்தை விட கீழானோர்களே...!
சட்டங்கள் எல்லாம் சத்தமின்றி உறங்குவதால் நித்தமும் உம் காமவேட்டை தொடருதடா..!
கடுமையான அரேபிய சட்டங்கள் இங்கிருந்தால் அருகில் உள்ள உன் மனைவியைக் கூட தொட நீ யோசிப்பாயடா ...!
காமக் கொடூரர்களே நீங்கள் எல்லாம் மனித குலத்திற்கே இழிவடா, மரணமே உங்களுக்கு சரியான தீர்வடா...!
பெண்
போக பொருளல்ல
பெண்
போதை பொருளுமல்ல
அவள்
மெண்மையான
உணர்வுகளுக்கு
சொந்தமானவள்
தாய்மைக்கு
பந்தமானவள்
வலிகளை
தாங்கி நம்மை
ஈன்றவளும்
பெண்ணே
வாரி
அனைத்து வாஞ்சையுடன்
முத்தமிட்ட
தாய்மையின் மகிமையை
எடுத்து
சொல்ல ஏது வார்த்தைகள்!!
பெண்மையின்
மெண்மையை மேண்மையை
உண்மையாக
நேசிப்போம்
உளப்பூர்வமாக
பூசிப்போம்!!
பதினோர் வயது சிறுமி பாலியல் பலாத்காரம் பதினேழு பேர் கைது!!
எங்கே
செல்கிறது என் தேசம்
கேள்வியுற்ற
செவிகள் அதிர்கிறது
வயது
பேதமின்றி
அந்த
பிஞ்சு மலரை
வேட்டையாடிய
ஓநாய்களை
நீதி
மன்றத்தில் நிறுத்துவதை விட
வீதியில்
நிற்க வைத்து
துப்பாக்கி
தோட்டாக்களால்
உயிரை
எடுப்பதே சரியான நீதியாகும்
இந்த
சண்டாளர்கள்
புவியில்
. வாழ்வதற்கே தகுதியற்றவர்கள்!!
Subscribe to:
Posts (Atom)
நீதானே என் உலகம்
ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது

-
பிரமிக்க வைக்கும் பெண்மையே!! உன் பேரழகில் வியந்த என் விழிகளின் இமைகள் இயங்க மறுப்பதும் மறுக...
-
அன்பே அழகான இந்த உந்தன் பூவிதழ் சிந்தும் புன்னகைக்கு முன்னால் ஆடம்பர அங்காடிகளில் அடுக்கி ...
-
பூத்திருக்கும் மலர்கள் அழகா புன்னகைக்கும் நிலவே நீ அழகா பார்க்கும் எந்தன் கண்களுக்கு பேதம் ...