மழை

      நீரில் நனைய பிடிக்கும

மகிழ்
        நிலவை காண பிடிக்கும்

விழி
      மூடி தூங்க பிடிக்கும்

மொழி
       பாடி இசைக்க பிடிக்கும்

குழந்தையாக
               மாற பிடிக்கும்


எதிர்

      பார்த்து காத்திருக்கிறேன்


என்னவன்

        அவன் மண்ணவனின்


மதி

     முகத்தை காண வழியில்


விழி

      பதித்து கவியின் மொழி படைத்து!!!


பூத்திருக்கும்

         பூவாக வாசமுடன்


அவன்

       மீதான அளவில்லா நேசமுடன்!!


இல்லம்

         வந்து இந்த உள்ளத்தின்


உணர்வுகளை

       உன்னோடு பகிர்ந்து கொள்ள


உனக்காக

       காத்திருக்கிறேன்!!


துயில்

      கொள்ள துடிக்கும்


இமைகளுக்கு

        இரு சற்றே பொறு


      என

          தடை விதித்தே!!


உன்னை பற்றி யோசித்தால் கற்பனை ஊற்று கணக்கற்று பிறக்கிறது
 என்னை பற்றி யோசித்தால் வந்த ஊற்றும்
வற்றி போகிறது வறட்சி நிலம் போல்!!!



அதி

    காலையில்


வீசிடும்
        மனதிற்கு

இதமான
      தென்றலின்

சுகமான
      தாலாட்டை

மெய்
     மறந்து ரசிக்கிறேன்

பொய்
       மறுத்து

மெய்
      உரைக்கிறேன்

நான்
     காண்பவை

எல்லாம்
       அழகு நானல்ல!!!

இமைக்க

       மறந்த உன் 

இரு 

    விழியின்

கரு

   குமிழின்

கவி

     அழகில்

மகிழ்ந்து

      போனதே

மாமனின்

       மாசற்ற இதயம்!!!


பிரமிக்க
      வைக்கும் பெண்மையே!!

உன்
      பேரழகில்

வியந்த
      என் விழிகளின்

இமைகள்
      இயங்க மறுப்பதும்

மறுக்க
     முடியாத உண்மையே!!

என்
     உள்ளத்து உணர்வுகளுக்கு

இன்பமூட்டும்
  . நண்மையே!!!



பிறர் நிலை 

         சாரும் நிலை வராது

பிரித்து விடு

            உயிரை  இறைவா ..



என் கல்லறையில் சதையுன்னும் கரையானும் என் இருதயத்தை விட்டு சென்றதடி அதில் நீ இருந்த காரணத்தினால்...!!

 மவுனமாக கரைகிறாள் மகிழ்ச்சியாக நிறைகிறாள் மனதுக்குள்!!
என்
     மீதான ஏக்கத்தை

உந்தன்
       விழிகளில் காண்கிறேன்

உன்
     மீதான மோகத்தை

என்
      உணர்வுகளில் சமைத்து

உனக்கு
       உணவாக தருகிறேன்

மகிழ்வாக
      மறுக்காமல் மன நிறைவோடு

ஏற்று கொள்


அக்கறை அற்ற 

                உறவுகளின் மீது

அளவற்ற 

              வெறுப்புடன் ...

       பாரதி



மொழியோடு காதலா இல்லை உன் விழியோடு காதலா பேதம் அறியா நிலை கொண்ட போதையில் நான்!!

பூத்திருக்கும்
         மலர்கள் அழகா

புன்னகைக்கும்
         நிலவே நீ அழகா

பார்க்கும்
       எந்தன் கண்களுக்கு

பேதம்
        பார்க்க தெரிய வில்லை!!

அன்பே
      அழகான இந்த

உந்தன்
       பூவிதழ் சிந்தும்

புன்னகைக்கு
         முன்னால்

ஆடம்பர
        அங்காடிகளில்

அடுக்கி
        வைத்த ஆபரண

பொன்
        நகைகள் யாவும்

என்
     விழிகளின் பார்வைக்கு

மலிவாக
       போவதின் மாயமென்ன

மர்மம்
       என்ன!!!
மனிதர்களா நீங்கள்...!

ஊனைத் தின்று ஊனை வளர்த்து, சிதைக்குள் அடங்கும் சதைக்கு ஆசைபட்டு மிருகங்களான மானிடரே...!

காட்டில் வாழும் மிருகங்கள் கூட நாட்டில் வாழும் உங்களை கண்டு சிரிக்குதடா...!

காட்டில் வாழ்ந்தாலும் கண்ணியம் காத்து வாழுதடா , நாட்டில் வாழ்ந்து நாணயம் இழந்து போகின்றீர்களே நியாயம் தானா இழிவானோரே ...!

நாடி நரம்புகள் ஆடி அடங்கிப்போன பின்னும் இச்சை தீர்க்க பூந்தளிர்களின் உடல் கேட்குதாடா,
மிருகத்தை விட கீழானோர்களே...!

சட்டங்கள் எல்லாம் சத்தமின்றி உறங்குவதால் நித்தமும் உம் காமவேட்டை தொடருதடா..!

கடுமையான அரேபிய சட்டங்கள் இங்கிருந்தால் அருகில் உள்ள உன் மனைவியைக் கூட தொட நீ யோசிப்பாயடா ...!

காமக் கொடூரர்களே நீங்கள் எல்லாம் மனித குலத்திற்கே இழிவடா, மரணமே உங்களுக்கு சரியான தீர்வடா...!


பெண்

     போக பொருளல்ல


பெண்

       போதை பொருளுமல்ல


அவள்

      மெண்மையான


உணர்வுகளுக்கு

              சொந்தமானவள்


தாய்மைக்கு

             பந்தமானவள்


வலிகளை

         தாங்கி நம்மை


ஈன்றவளும்

         பெண்ணே


வாரி

      அனைத்து வாஞ்சையுடன்


முத்தமிட்ட

         தாய்மையின் மகிமையை


எடுத்து

       சொல்ல ஏது வார்த்தைகள்!!


பெண்மையின்

         மெண்மையை மேண்மையை


உண்மையாக

       நேசிப்போம்


உளப்பூர்வமாக

         பூசிப்போம்!!




மனிதர்களா நீங்கள்...!


அலை

      பாயும் மனதோடு


அகலாத
       உந்தன் நினைவோடு

வாழ்க்கை
       எனும் படகில்

காலம்
     எனும் கடலில்

கவலை
     ஏதுமின்றி பயணிக்கிறேன்

       கடைத்தேறுமா
நீர்
    சுழியில் மூழ்குமோ

யார்
     அறிவார்!!
பதினோர் வயது சிறுமி பாலியல் பலாத்காரம் பதினேழு பேர் கைது!!

எங்கே
      செல்கிறது என் தேசம்

கேள்வியுற்ற
           செவிகள் அதிர்கிறது
வயது
       பேதமின்றி
அந்த
       பிஞ்சு மலரை

வேட்டையாடிய
            ஓநாய்களை
நீதி
     மன்றத்தில் நிறுத்துவதை விட

வீதியில்
        நிற்க வைத்து

துப்பாக்கி
        தோட்டாக்களால்

உயிரை
      எடுப்பதே சரியான நீதியாகும்
இந்த
       சண்டாளர்கள்
புவியில்
.     வாழ்வதற்கே தகுதியற்றவர்கள்!!
காரணம் தெரியாமல்
கருகி போகும்
சில மனசு
எத்தனை ஆறுதல்
சொன்னாலும்
உயிர் பெறுவதில்லை.


தெய்வங்கள் விளையாட
தென்றல் சாமரம் வீச
பூமி யாசகம் பெற்றதோ
நெஞ்சம் மகிழும் அந்த பிஞ்சு
பாதங்களை முத்தமிட...

                     
எறும்புக்கும் ..கொசுவிற்கும் பேராசையுண்டு உணவில்.....

     மனிதன்.. என்ன விதிவிலக்கா...
காசு பணம் துட்டு..மனி. மனி..

      நெஞ்சு.. பெண்னுடம்பு... ஆசை..
ஆசை..   உடையதிருக்க ..
       அடுத்தவன் பெண்மீதே..  ஆசை
   அரிப்பாசை... பின் செருப்படி பூசை
என்னருகில் நீ இருந்தால் 
இன்ப துன்பம் சரிசமே 
உன்னருகில் நான்  இருந்தால் 
இப்பிறவி பயன்பெறுமே
சிவமே சிவமே

பகலில்  தூங்கி
இரவில் விழிறேன்

வாழ்கை ஒரு வட்டம்டா..


நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது